
சென்னை: பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கத்தேர்தலை, வரும் நவ.27-க்குள் நடத்தி முடிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர் வி.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், “சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.