
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணை அக்டோபர் 3-ம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினம் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையும் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில் அக்டோபர் 3-ம் தேதி பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு ஜம்மு காஷ்மீரில் பட்காம், நாக்ரோட்டா தொகுதிகள், ராஜஸ்தானில் அன்டா தொகுதி, ஜார்க்கண்டில் காட்ஷிலா தொகுதி, தெலங்கானாவின் ஜுபிளி ஹில்ஸ் தொகுதி, பஞ்சாபில் தரண் தரண் தொகுதி, மிசோரமில் தம்பா தொகுதி, ஒடிசாவில் நவுபாடா தொகுதி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.