• September 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ராகுல் காந்​திக்கு கொலை மிரட்​டல் விடுத்​ததாக காங்​கிரஸ் கட்சி குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. இதையடுத்​து,
பாஜக​வுக்கு காங்​கிரஸ் 3 முக்​கிய கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளது.

இதுகுறித்து காங்​கிரஸ் கட்சி எக்ஸ் தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: தொலைக்​காட்சி விவாதத்​தின்​போது பாஜகவைச் சேர்ந்த பிந்து மகாதேவ், ராகுல் காந்​திக்கு வெளிப்​படை​யாக கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளார். முதலா​வ​தாக, இது மக்​கள் தலை​வர் ராகுல் காந்திக்கு எதி​ராக தீட்​டப்​படும் ஒரு மிகப்​பெரிய தீய சதி திட்​ட​மா? இரண்​டாவது, மிரட்​டல், வன்​முறை, கொலை மிரட்​டல் வழி​யான அரசி​யலை பாஜக ஆதரிக்​கிற​தா? மூன்​றாவது, அரசின் நிர்​வாகத்தை விமர்​சிக்​கும் அரசி​யலமைப்பு பொறுப்​பில் உள்ள மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் மற்​றும் பிற எதிர்க்​கட்சி தலை​வர்​களுக்கு எதி​ரான வன்​முறையை இயல்​பான ஒன்​றாக்க பாஜக முயல்​கிற​தா? என்ற 3 கேள்வி​களுக்கு விடை காண காங்​கிரஸ் விரும்​பு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *