
புதுடெல்லி: இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்ளார். இந்நூலை ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:பிரதமர் மெலோனியின் வாழ்க்கை ஒருபோதும் அரசியல் பற்றியதாகவோ அதிகாரத்தைப் பற்றியதாகவோ இருந்ததில்லை. இது அவருடைய தைரியம், உறுதிப்பாடு, பொது சேவை, இத்தாலியர்களின் அர்ப்பணிப்பு பற்றியது. பிரதமர் மெலோனியின் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் உள்ளன. இதனால் இந்த நூல் மிகவும் சிறப்பாகிறது.