
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத் தலைவர் நேற்றும் விசாரணை நடத்தினார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்பவர் நேற்று உயிரிழந்தார்.