
சென்னை: தவெக பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்துக்கு மக்களின் உணர்வாக மக்களின் சந்தேகங்களை பதிவு செய்திருந்தேன். அதற்கு உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுவதாக கூறியிருக்கும் முதல்வரின் போட்டோஷூட் வீடியோவே, தமிழகத்துக்கு வாய்த்திருக்கும் முதல்வர் எப்படிப்பட்டவர் என்பதற்கு சாட்சி.