
சென்னை: தமிழகத்தின் 1,069 கி.மீ. நீளக்கடற்கரை பகுதியில் சாத்தியமான இடங்களில் சிறு துறைமுகங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை கடல்சார்வாரியம் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கடல்சார் வாரியத்தின் 97-வது வாரிய கூட்டம், அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைய, சிறு துறைமுகங்கள் மூலம் வணிகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிப்பெற வழிவகை செய்ய வேண்டும்.