• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் சர்​வர் பிரச்​சினை​யால் சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் பத்​திரப்​ப​திவு நடை​பெறாமல் முடங்கியது. பல மணி நேரம் ஆவணங்​களு​டன் காத்​திருந்த பொது​மக்​கள் மிகுந்த அவதிக்​குள்​ளாகினர்.

தமிழகம் முழு​வதும் 11 பதிவு மண்​டலங்​களில் 56 பதிவு மாவட்​டங்​களின்​கீழ், 587 பதிவு அலு​வல​கங்​கள் செயல்​பட்டு வரும் சூழலில், சில நேரங்​களில் சர்​வர் பிரச்​சினை​யால் பதிவுப்​பணி​கள் முடங்​கி, பொது​மக்​கள் பாதிக்​கப்​படும் சூழல் ஏற்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், கடந்த சனிக்​கிழமை முதலே பொது​மக்​கள் பதிவு ஆவணங்​கள் உள்​ளீடு செய்​தல் மற்​றும் டோக்​கன் பெறும் போர்ட்​டலில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *