• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை, சேலம் கோட்​டங்​களுக்கு உட்​பட்ட 20 ரயில் நிலை​யங்​களில் ‘எலெக்ட்​ரானிக் இன்ட்​டர் லாக்​கிங்’ என்ற நவீன சிக்​னல் முறையை செயல்​படுத்த ரயில்வே வாரி​யம் ரூ.230 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் உள்ள முக்கிய வழித்​தடங்​களில் ரயில்​களின் வேகத்தை அதி​கரிக்​க​வும், பாது​காப்​பாக இயக்​க​வும் ரயில்வே நிர்​வாகம் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்துவரு​கிறது. தண்​ட​வாளம், சிக்​னல் முறை​களை மேம்​படுத்​து​வது உட்பட பல்​வேறு பணி​களை மேற்​கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகு​தி​யாக ‘எலெக்ட்​ரானிக் இன்ட்​டர் லாக்​கிங்’ என்ற நவீன சிக்​னல் முறையை செயல்​படுத்த ரயில்வே வாரி​யம் அனுமதி அளித்​துள்​ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ‘எலெக்ட்​ரானிக் இன்ட்​டர் லாக்​கிங்’ என்​பது ரயில்​களை பாது​காப்​பாக இயக்க ரயில்வே கையாளும் இயந்​திர தொழில்​நுட்ப கட்​டமைப்பு ஆகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *