
சிவகாசி: “கரூருக்கு நேரில் சென்ற முதல்வர், துணை முதல்வர் அன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ஏன் நேரில் செல்லவில்லை. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி பேசினார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ நடைபயணத்தின் ஒரு பகுதியாக இன்று சிவகாசியில் நடைபயணம் மேற்கொண்டார். சிவகாசி சிவன் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு நடைபயணத்தை தொடங்கிய அன்புமணி, பாவடி தோப்பு திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.