• September 29, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்தியா – பூடான் இடையே ரயில் பாதைகளை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், இத்திட்டம் ரூ.4,033 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

அசாமின் கோக்ரஜார் – பூடானின் கெலெபு இடையே ஒரு ரயில்வே லைன், மேற்கு வங்கத்தின் பனார்ஹெட் – பூடானின் சம்ட்சே இடையே ஒரு ரயில்வே லைன் என இரண்டு ரயில் பாதைகளை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இவ்விரு வழித்தடங்களில் ரூ. 4,033 கோடி செலவில் ரயில் பாதைகள் அமைக்கப்படும் என விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *