
மதுரை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுத்துவிட்டது.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசிலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று மனு தாக்கல் செய்தார்.