
கரூர்: ‘குடிக்க தண்ணீர்கூட கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை, பகல் 12 மணி முதல் காத்திருந்தோம். குழந்தைகளுடன் சென்று சிக்கிக்கொண்டோம், வெளியில் கூட வர முடியவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் கூறினார்கள்’ என கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கரூரில் நேற்று முன் தினம் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சூழலில், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தவெக கூட்டம் நடைபெற்ற கரூர் வேலுசாமிபுரத்திற்கும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.