
விருதுநகர்: மக்கள் கேள்வி கேட்டால் தான் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று (செப்.29) விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள குண்டாறு பகுதியை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.