• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். எனவே, சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொலியில், ‘கரூரில் நடந்தது கொடும் துயரம். மருத்துவமனையில் நான் சென்று பார்த்த காட்சிகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. கனத்த மனதோடுதான் இன்னும் இருக்கிறேன். இந்த செய்தி கேட்டவுடன் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னாலும் வீட்டில் என்னால் இருக்க முடியவில்லை. அதனால்தான் உடனே அன்று இரவே கரூர் சென்றேன். குழந்தைகள், பெண்கள் என 41 உறவுகளை நாம் இழந்துள்ளோம். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து வழங்கி வருகிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *