
புதுடெல்லி: வரும் பண்டிகை காலத்தில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தீபாவளிக்கு பிறகு சத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மத்திய அரசின் முயற்சியால் கொல்கத்தாவின் துர்கா பூஜை யுனெஸ்கோவின் கலாச்சார பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதேபோல சத் பூஜையையும் யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.