
புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) கவலை தெரிவித்துள்ளது.
வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மீது பல அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வக்பு சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் அக்டோபர் 3 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளனர்.