
புதுடெல்லி: பேங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஹிதேஷ் சிங்லா (32). இவர் வேலை பார்த்த வங்கிகிளையில் தணிக்கை நடைபெற்ற போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
2023 மே முதல் 2025 ஜூலை வரையிலான காலகட்டத்தில் எப்டி, பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் செயலற்ற கணக்குகளில் உள்ள ரூ.16.10 கோடி மதிப்பிலான பணத்தை சிங்லா தன் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளார்.