
சென்னை: கரூர் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கரூரில் நடந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் தங்களது இன்னுயிரை இழந்திருக்கின்றனர். அவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.