
சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சென்னையில் விஜய் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், நேற்றுமுன் தினம் இரவு 11 மணிக்கு அவர் சென்னை திரும்பினார். அவருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் இரவு ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.