
சென்னை: தவெக கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்களை மறித்து தாக்குதல் நடத்தும் மனநிலைக்கு தொண்டர்களை மாற்றியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் சம்பவத்தில் தமிழகமே துயரத்தில் இருக்க, பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேரிடரிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். காவல் துறை நிபந்தனைகள் எதையும் தவெக பிரச்சாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டன.