• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: திமுக ஆட்​சிக்கு வந்​தால் ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.2,500 கொள்​முதல் விலை வழங்​கப்​படும் என்று கூறி ஆட்​சிக்கு வந்த மு.க.ஸ்​டா​லின், 2021-ம் ஆண்​டில் வழங்​கி​யிருக்க வேண்​டிய ரூ.2,500 விலையை நான்​கரை ஆண்​டு​கள் கழித்து இப்​போது தான் வழங்​கி​யிருக்​கிறார்.

உண்​மை​யில் 2021-ம் ஆண்​டில் நடை​முறை​யில் இருந்த கொள்​முதல் விலை​யை​விட திமுக வாக்​குறுதி அளித்த கொள்​முதல் விலை 32.42 சதவீதம் அதி​கமாகும். அதே அளவீட்டை கொண்டு பார்த்​தால் தற்​போது ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.3,311 வழங்க வேண்​டும். ஆனால், அதை​விட ரூ.811 குறை​வாக கொடுத்​து​ விட்​டு, நெல்​லுக்கு அதிக விலை கொடுத்து விட்​ட​தாக முதல்​வர் ஸ்டா​லின் தற்​பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *