
கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் வேலுசாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் சனிக்கிழமை அன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 40 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கரூர் – வேலுசாமிபுரத்தில் நேற்று (செப்.27) காலை முதலே விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் விதமாக தவெக உறுப்பினர்கள், விஜய்யின் ரசிகர்கள் மற்றும் மக்கள் என அதிகமானோர் அங்கு திரண்டனர். இரவு 7 மணி அளவில் பிரச்சார கூட்டத்துக்கு பேருந்தில் வந்த விஜய், தனது பேச்சை பேருந்தின் மேற்புறம் நின்றபடி தொடங்கினார். அவர் பேசியபோது ஆம்புலன்ஸ் வாகனங்கள் சில சென்றன. அதோடு விஜய் பேசும்போதே சிலருக்கு தண்ணீர் தேவைப்பட்டதால், பேருந்துக்கு மேல் இருந்தபடி அதை அவரும், அவருடன் இருந்தவர்களும் வழங்கியிருந்தனர்.