
கரூர்: கரூரில் நேற்று விஜய் உரையாற்றியபோது மின் தடை செய்யப்பட்டது என்பது திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது. மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களால் பொருத்தப்பட்ட ஜெனரேட்டர்கள், போகஸ் லைட்டுகள்தான் கூட்ட நெரிசலில் ஆஃப் ஆனது என மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.