• September 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விஜய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நெரிசலில் உயிர் பலி ஏற்பட்ட நிலையில் அவரோ, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளோ பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த முதலுதவியும் செய்யவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் செப்.27ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 35-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியான துயரச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதுடன் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *