
கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவம் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அவற்றின் தொகுப்பு: