• September 28, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நியூ​யார்க்​கில் ஐ.நா. பொதுச் சபை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பல்​வேறு நாட்டு தலை​வர்​கள் பங்​கேற்​றனர். பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசும்​போது, “ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, பாகிஸ்​தான் வெற்றி பெற்​றது. இந்​தி​யா​வின் 7 போர் விமானங்​களை நாங்​கள் சுட்டு வீழ்த்​தினோம்” என்று கூறி​னார்.

இந்​நிலை​யில், ஐ.நா. சபை​யில் இந்​தியா சார்​பில் நேற்று உரை​யாற்​றும் சுற்று வந்​தது. அப்​போது ஐ.நா.​வின் நிரந்தர பிர​தி​நி​தி​யான முதன்மை செயலர் பீட்​டல் கெலாட், ஷெபாஸ் ஷெரீப்​புக்கு சரி​யான பதிலடி கொடுத்​தார். சபை​யில் பீட்​டல் பேசி​ய​தாவது: தீவிர​வாத அமைப்​பு​களை பாது​காக்​கும் கேட​யம் போல் இருக்​கும் பாகிஸ்​தான், தோல்​வியை கூட வெற்​றி​யாக சித்​தரிக்க முயற்​சிக்​கிறது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, பாகிஸ்​தானின் விமான தளங்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. விமான தளத்​தின் முக்​கிய கட்​டிடங்​கள் நொறுங்கி எரிந்​தன. அப்​போது போரை நிறுத்த இந்​தி​யா​விடம் பாகிஸ்​தான் கெஞ்​சி​யது. விமான படை ஓடு பாதை சேதம் அடைந்​ததும், கட்​டிடங்​கள் தீயில் எரிந்​ததும் வெற்றி என்று பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கரு​தி​னால், அவர் சந்​தோஷப்​படு​வதை வரவேற்​கிறோம். இவ்​வாறு பீட்​டல் கெலாட் பேசி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *