
புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தை எட்டியுள்ளது.
இதுதொடர்பாக நியூயார்க்கை சேர்ந்த அவதார்-செராமவுண்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் 2016-ல் 13%-மாக இருந்த பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2024-ல் 19% அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% தொட்டுள்ளது. இது சமூகத்தில் முற்போக்கான நிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த எண்ணிக்கை 2020-ல் 14%, 2021-ல் 15%, 2022-ல் 17%, 2023-ல் 19%, 2024-ல் 19%-ஆக இருந்தது.