
சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“இது எதிர்பாராமல் நடந்த விபத்துதான். திட்டமிட்டு யாரும் இப்படி செய்வதில்லை. இந்த மரணம் நம் எல்லோருக்கும் காயத்தையும், வலியையும் கொடுத்துள்ளது. நம்மைவிட அதிக மன வேதனையில் விஜய் இருப்பார். உயிரிழந்த தமிழ் பிள்ளைகளுக்கு எனது கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என சீமான் தெரிவித்தார்.