
சென்னை: காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியிருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: வரலாற்றில் ஒரு சிலர்தான் பல கோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். அப்படி ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.