• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்​னை​யில் அண்​மைக் கால​மாக தெரு நாய்​கள் தொல்​லை​யும், நாய் கடிப்​ப​தால் பரவும் ரேபிஸ் நோயால் பாதிப்​போர் எண்ணிக்​கை​யும் அதி​கரித்து வரு​கின்​றன. சில தினங்​களுக்கு முன்பு ராயப்​பேட்​டையை சேர்ந்த ஒரு​வர் ரேபிஸ் நோயால் பாதிக்​கப்​பட்டு உயி​ரிழந்​தார்.

இது​போன்ற நாய்​கள் தொல்லை தொடர்​பாக மாநகரின் பல்​வேறு பகு​தி​களை சேர்ந்த பொது​மக்​கள் கூறிய​தாவது: நாய் கடித்​தால் காலில் கடும் வலி ஏற்​படு​கிறது. இது தொடர்​பாக மாநக​ராட்​சி​யிடம் புகார் தெரி​வித்​தால், கால​தாமத​மாக வந்​து, நாயை பிடித்​துச் சென்​று, கருத்​தடை செய்​து, ஒரு வாரத்​துக்கு பிறகு, அதே இடத்​தில் விட்​டு​விட்​டு, எங்​கள் புகார் மீது தீர்வு கண்​டு​விட்​ட​தாக புகாரை முடித்​து​விடு​கின்​றனர். அந்த நாய் தெரு​வில் செல்​வோரை மீண்​டும் விரட்டி சென்று அச்​சுறுத்​துகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *