
சென்னையில் அண்மைக் காலமாக தெரு நாய்கள் தொல்லையும், நாய் கடிப்பதால் பரவும் ரேபிஸ் நோயால் பாதிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு ராயப்பேட்டையை சேர்ந்த ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதுபோன்ற நாய்கள் தொல்லை தொடர்பாக மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: நாய் கடித்தால் காலில் கடும் வலி ஏற்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தால், காலதாமதமாக வந்து, நாயை பிடித்துச் சென்று, கருத்தடை செய்து, ஒரு வாரத்துக்கு பிறகு, அதே இடத்தில் விட்டுவிட்டு, எங்கள் புகார் மீது தீர்வு கண்டுவிட்டதாக புகாரை முடித்துவிடுகின்றனர். அந்த நாய் தெருவில் செல்வோரை மீண்டும் விரட்டி சென்று அச்சுறுத்துகிறது.