
சென்னை: அண்ணா மீது ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும், மானமுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபக் கனலுக்கு ஆளாக நேரிடும் என்று திமுக மாணவர் அணி எச்சரித்துள்ளது.
இது குறித்து திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தரந்தாழ்த்து வாய்த்துடுக்காகப் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம்; கடும் கண்டனத்துக்கு உரியது.