
சென்னை: நீலக்கொடி கடற்கரை திட்டத்தை எதிர்த்து சென்னையில் மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரைகளில் அமல்படுத்தப்படும் நீலக்கொடி கடற்கரை, கடல் மேம்பாலம், எண்ணெய் எரிவாயு போன்ற திட்டங்களை எதிர்த்து தென்சென்னை அனைத்து மீனவ கிராம சபை சார்பாக மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. சபையின் ஒருங்கிணைப்பாளர் என்.ரத்தினவேல் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நீலக்கொடி திட்டம் வந்தால் கடற்கரையில் இருக்கக்கூடிய மீனவர்களின் கட்டுமரங்கள், வலைகள், ஃபைபர் படகுகள் ஆகியவற்றை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படும். இத்திட்டம் உலக நாடுகளுக்கு பொருந்தும். ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருந்தாது. ஏனென்றால் இங்கு கரைதொழில் செய்யக்கூடிய மீனவ சமூகங்கள் நிறைய உள்ளன. மீன் பிடித்தொழில் நடைபெறும் இடத்தில் நிச்சயமாக மீன் வாடை வரும்.