• September 27, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: உ.பி.​யின் பரைச் மாவட்​டம், பயாக்​பூர் அரு​கில் உள்ள பகல்​வாரா கிராமத்​தில் 3 மாடி கட்​டிடம் ஒன்​றில் சட்​ட​விரோத​மாக மதரசா செயல்​படு​வது குறித்து மாவட்ட நிர்​வாகத்​திற்கு தொடர்ந்து புகார்​கள் வந்​தன. இதையடுத்து பயாக்​பூர் துணை ஆட்​சி​யர் அஸ்​வினி குமார் பாண்டே தலை​மை​யில் அதி​காரி​கள் கடந்த புதன்​கிழமை அங்கு ஆய்வு நடத்​தச் சென்​றனர்.

அப்​போது அதி​காரி​கள் மாடிக்​குச் செல்​வதை மதரசா நடத்​துபவர்​கள் தடுக்க முயன்​றனர். எனினும் போலீ​ஸார் உதவி​யுடன் அக்​கட்​டிடத்​தில் அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். அப்​போது மாடி​யில் இருந்த கழிப்​பறை பூட்​டப்​பட்டு இருந்​தது. இதையடுத்து பெண் போலீ​ஸார் அதன் கதவை திறந்​த​போது, 9 முதல் 14 வயதுக்​குட்​பட்ட 40 சிறுமிகள் ஒரு​வர் பின் ஒரு​வ​ராக கழிப்​பறை​யில் இருந்து வெளியே வந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *