
திருநெல்வேலி: நெல்லை அருகே ஜெபம் செய்யச் சென்றவர்கள் மீது குங்குமம் பூசியதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கீழக்கல்லூர், நடுக்கல்லூர் கிராமங்களுக்கு கடந்த 22-ம் தேதி வந்துள்ளனர்.
அவர்கள் கீழக்கல்லூர் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மகாதேவன், பாஜகவைச் சேர்ந்த அங்குராஜ் உட்பட 3 பேர் வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களில் சிலரை அருகிலிருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, நெற்றியில் குங்குமம் பூசி, கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுச் செல்லும்படி வற்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.