
‘நீர்க்குமிழி’ படம் மூலம் கே.பாலசந்தரை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் ஏ.கே.வேலன். எம்.ஜி.ஆர். நடித்த ‘மாட்டுக்கார வேலன்’, ‘அரசக்கட்டளை’ உள்பட பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதியவர், இந்த வேலன். இவர் இயக்கித் தயாரித்த முதல் படம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’. இதில் கிடைத்த வருமானத்தை வைத்து சென்னையில் அருணாச்சலம் ஸ்டூடியோவை அமைத்தார். அவர் எழுதி, இயக்கி, தயாரித்த படங்களில் ஒன்று ‘காவேரியின் கணவன்’.
முத்துக்கிருஷ்ணன், வளையாபதி, சவுகார் ஜானகி, சூர்யகலா, சி.கே.சரஸ்வதி, தங்கவேலு, கரிக்கோல் ராஜ், அங்கமுத்து என பலர் நடித்தனர்.