
சென்னை: 2047-ம் ஆண்டில் கப்பல் கட்டுமானத் துறையில் உலக அளவில் இந்தியா முன்னணி நாடாகத் திகழும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறினார். சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் பங்கேற்று, பல்கலை. அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவித்து, பட்டங்களை வழங்கினார். வெவ்வேறு படிப்புகளில் 2,196 பேர் பட்டம் பெற்றனர்.