
ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவில் திருமணம் ஆகாதவர்களுக்கு அனுமதியில்லை என்ற காவல் துறையினரின் எச்சரிக்கை பேனரால் பொது மக்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
ஓசூரில் 152 ஏக்கரில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் 4 ஏக்கர் பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்கப் பட்டுள்ளது. இப்பூங்காவில் பொதுமக்கள் நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏரிக்கரையையொட்டி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.