
சென்னை: கோவை – மருதமலையில்184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசின் இந்து அறநிலைய துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் மருதமலை வனப்பகுதிகளில் யானைகள் வழித்தடங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.