
நாமக்கல்: பேனர் வைத்ததற்காக தவெக நிர்வாகி மீது மட்டும்தான் வழக்கு போடப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் காட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியது: “நாமக்கல், கரூரில் நாளை (செப்.27) தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கடைசி நேரத்தில் அனுமதியும் வழங்கப்படுகிறது. கரூரில் மதியம் வரை கூட்டம் நடைபெற இடத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. மதியத்துக்கு மேல்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.