
புதுச்சேரி ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு இலவசமாக மளிகை, சர்க்கரை, எண்ணெய் தர அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கான டெண்டரை கான்பெட் கோரியுள்ளது. வரும் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் கடந்த தீபாவளிக்கு முன்பாக திறக்கப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, சர்க்கரை இலவசமாக தரும் பணி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரேஷனில் அரிசி இலவசமாக விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷனில் அரிசி தரப்படவில்லை. அரிசிக்கான மறு டெண்டர் கோரி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ரேஷனில் விடுபட்ட அனைத்து மாதங்களுக்கும் இலவச அரிசியை தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.