
நொய்டா: சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் மேலும் தொடரும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உத்தர பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: மக்களின் சுமையை குறைக்கும் விதமாக மத்திய அரசு வரிகளை கணிசமாக குறைத்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், மக்களின் வருமானம் மற்றும் சேமிப்பு இரண்டும் அதிகரித்துள்ளது.
ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிப்பதன் மூலமும், புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை செயல்படுத்தியதன் மூலமும் மக்கள் இந்த ஆண்டு மட்டும் ரூ.2.5 லட்சம் கோடியை சேமிக்க வழி ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டியை அமல்படுத்தியதன் மூலம் மறைமுக வரி விதிப்பில் சீர்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தியது.