
சென்னை: சென்னையில் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் குழந்தைகளும், பெரியவர்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.