
சென்னை: ‘பயன்பாட்டுத் துறையின் தேவையின் அடிப்படையில் கட்டிடங்களுக்கான மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்’ என்று பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். சென்னை, சேப்பாக்கம் பொதுப்பணித் துறை பயிலரங்கில், டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்த உதவிப் பொறியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
இப்பயி்ற்சியை பார்வையிட்டு அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: அனைத்து உதவிப் பொறியாளர்களும், பயிற்சியின் அடிப்படையில் திறமையாகப் பணிபுரிய வேண்டும். பொறியாளர்கள் மேன்மேலும் படித்து, அவர்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.