• September 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கெஜ்ரி​வாலுக்கு டெல்​லி​யில் வீடு ஒதுக்​கீடு செய்ய மத்​திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நேற்று விசாரணைக்குவந்​தது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘கெஜ்ரி​வாலுக்கு இன்று முதல் 10 நாட்​களுக்​குள் பொருத்​த​மான வீடு ஒதுக்​கப்​படும். இதை நீங்​கள் பதிவு செய்து கொள்​ளலாம்’’ என்று தெரி​வித்​தார்.

இந்​தப் பிரச்​சினை விரை​வில் சுமூக​மாக தீர்க்​கப்​படும் என்று டெல்லி துணைநிலை ஆளுநர் அண்​மை​யில் கூறியதை நீதி​மன்​றம் சுட்​டிக்​காட்​டியதை தொடர்ந்து துஷார் மேத்தா இதனை தெரி​வித்​தார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூத்த வழக்​கறிஞர் ராகுல் மெஹ்ரா ஆஜரா​னார். கெஜ்ரி​வாலுக்கு கடந்த காலத்​தில் வழங்​கப்​பட்ட வீட்டை காட்​டிலும் வசதிக் குறை​வாக வீட்டை ஒதுக்​கக் கூடாது என அவர் வாதிட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *