
கடலூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி வரிகுறைப்பு மாபெரும் புரட்சி என்றும், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி மீதமாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் 4 வகையான உயர்ந்த வரிகளை விதித்து ரூ.55 லட்சம் கோடியை மக்களிடமிருந்து வசூலித்துள்ளனர். பாஜக ஆட்சியில்தான் வரி அதிகமாக்கப்பட்டது. மக்களை 8 ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளனர்.