
திருமலை: ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று காலை திருமலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏஐ தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். அப்போது அவர் அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் அதன் பயனையும், செயல்பாட்டு முறைகளையும் கேட்டறிந்தார்.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு ஏழுமலையானின் மகிமைகள், திருமலையின் புனித தன்மை, பெருமைகளை விளக்கும் வகையில் வீடியோ பதிவுகளை போட்டு காண்பிக்க வேண்டும். அப்போதுதான் திருமலையின் புனிதம், ஏழுமலையானின் பெருமைகள், வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிவார்கள். மேலும், திருப்பதி தேவஸ்தானத்துக்கு சம்பந்தப்பட்ட அனைத்து கோயில்களையும் ஒரு குடையின் கீழ் இந்த கமாண்ட் கன்ட்ரோல் அறைக்குள் கொண்டு வரவேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார்.