
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கறிக்கோழி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக நேற்றும் சோதனை மேற்கொண்டனர். உடுமலையில் செயல்பட்டு வரும் தனியார் கறிக்கோழி நிறுவனத்துக்கு பல மாநிலங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன.
கடந்த 23-ம் தேதி உடுமலையில் உள்ள அலுவலகம், தீவன உற்பத்தி ஆலை, கணபதிபாளையத்தில் உள்ள இல்லம் ஆகியவற்றில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வைத் தொடங்கினர். இந்நிலையில், 3-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.