
வேடசந்தூர்: திமுக அரசின் மோசமான செயல்பாடுகளால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பொதுமக்களிடையே நேற்று மாலை அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்தோம். திமுக ஆட்சியில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியையாவது கொண்டு வந்தார்களா? தமிழகத்தை திறமையற்ற முதல்வர் ஆள்வதால் மக்களுக்குத் தேவையான திட்டங்கள் கிடைக்கவில்லை.
சட்டம் – ஒழுங்கும் சீர்குலைந்து விட்டது. போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வழக்குகள் அதிகரித்துவிட்டன. இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? திண்டுக்கல் துணை மேயர் மகனுக்கு போதைப் பொருள் விற்பனையில் தொடர்பு உள்ளதாக கர்நாடக போலீஸார் சம்மன் வழங்கி உள்ளனர்.