• September 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா​வில் பல்​வேறு படிப்​பு​களில் சிறந்து விளங்​கிய 304 மாணவ, மாணவி​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ர​வி,பதக்​கங்​கள், சான்​றிதழ்​கள் வழங்​கி​னார். தாய்​மொழிக்​கு தேசிய கல்விக் கொள்கை முக்​கி​யத்​து​வம் அளிக்​கிறது என்று குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேசி​னார்.

தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் 16-வது பட்​டமளிப்பு விழா சென்​னை​யில் உள்ள அதன் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தலைமை தாங்​கி​னார். இந்த விழா​வில் 3,007 இளநிலை, 3,098 முது​நிலை உட்பட 7,972 மாணவ, மாணவி​கள் பட்​டம் பெற்​றனர். இதில் பதக்​கங்​களை வென்ற 304 மாணவர்​களுக்கு ஆளுநர் ரவி பட்​டங்​களை வழங்​கி​னார். மேலும், ஆசி​யா​வுக்​கான காமன்​வெல்த் கல்வி ஊடக மையம் விருதை மாணவி திவ்யா பெற்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *